மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்ட பணிகளை பார்வையிட்டார்.பணிகளின் நிலவரம் பயனடையும் மக்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நிரம்பிய நிலையில் உள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டார். அணையின் வலது கரை இடது கரைஆய்வு சுரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேட்டூர் அணை நீர்வரத்து நீர் திறப்பு நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு டி எம் சி தண்ணீரை வழங்கினால் இப்பகுதி வளம் பெறும் என்றும் தெரிவித்தார். இது குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு பணித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி கோவை பெங்களூர் மட்டுமே உள்ளது சேலம் மாவட்டத்திலும் அமைத்திட வேண்டும் என்றும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றும் மேட்டூரில் இருந்து சேலம் வழியாக சென்னை எக்மோர் செல்லும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கூறினார்.
பெங்களூரின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் நீர் மலம் பாதிக்கிறது அந்த கழிவுகள் காவிரியில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து தரங்கம்பாடி வரை காவிரியில் இரு கறைகளையும் பலப்படுத்தி கழிவுகளை கலப்பதை தடுத்து தூய்மையான காவிரியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்தார்.
பா.ஜ.க மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் சுதீர்முருகன், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன்,மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங்,நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நீர்வளத்துறை மேட்டூர் செயற்பொறியாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment