தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா.


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 75 ஆம் ஆண்டு   குடியரசு தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக  ஓமலூர் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R.மணி. B.A.LL.B அவர்கள் இன்று நமது இந்திய திருநாட்டின்  75-வது குடியரசு தின விழாவில் தான் படித்த பள்ளியான தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில்  தேசியக் கொடியை ஏற்றிவைத்து கொடி பாடல் மற்றும் தேசிய கீதம் பாடி, மாணவ மாணவிகளுடன் வாழ்க்கையின் முன்னேற்றத்தைப் பற்றி சிறிது நேரம் உரையாடியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார் மற்றும் செல்வம் அவர்களும், தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் அதிமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad