வவுத்தனூர் ஓங்காளியம்மன் பண்டிகை கோலாகலம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 February 2024

வவுத்தனூர் ஓங்காளியம்மன் பண்டிகை கோலாகலம்.


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே வவுத்தனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் ஆலயத்தில்  வருடம் தோறும் தை மாதம் ஒங்காளி அம்மன் பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.அதே போன்று இந்த வருடமும்  ஓங்காளியம்மன் பண்டிகை பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்ட இன்று 05/02/24 ஓங்காளியம்மன் பண்டிகை வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் செய்யப்பட்டது. 

காலை 9:00 மணி முதல் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது சுவாமிக்கு ஆடு கோழி வெட்டி வழிபாடு செய்தனர். மாலை 5:00 மணியிலிருந்து பூ கரகம்,அக்னி கரகம்,அலகு குத்தும் நிகழ்ச்சி, வானவேடிக்கை மற்றும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . பக்தர்கள் பூ கரகம்,அக்னி கரகம், எடுத்து நேர்த்திகடன் செலுத்தினார்கள். பக்தர்களுக்கு கோவில் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. வவுத்தனூர் கிராமமே விழாகோலத்தில் காட்சி அளித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad