அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 February 2024

அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா.


சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே அரசு கலைக்கல்லூரி தன்னாட்சியில் பயிலும் மாணவ மாணவிகள் வருடம் தோறும் நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோன்று இந்த வருடமும் இரண்டாம் ஆண்டு பயிலும் பல்வேறு துறையில் இருந்து ஆர்வமுள்ள சுமார் 200 மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

200 மாணவர்களை நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டது.தொடர்ந்து ஒரு  வார காலத்திற்கு 21/02/24 புதன்கிழமை முதல் 27/02/24 செவ்வாய்க்கிழமை வரை மனக்காடு கிராமத்தில் நடைபெற்றது. பேராசிரியர் செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் சுரும்பார்குழலி போன்ற ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற்றது.நாட்டு நல பணி திட்டத்தில் ஈடுபடும் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு தினம்தோறும் இடைவெளி நேரம் மற்றும் மதிய உணவு இடைவெளி நேரத்தில் மாணவர்களுக்கு 12 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன் அவர்கள் மாணவர்களுக்கு வேண்டிய உணவுகள் வழங்கப்பட்டது. 


மாணவர்கள் மக்களிடையே கண் பரிசோதனை முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகாம் நடத்தப்பட்டது. இது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்மீக தகவல்களையும் கூறிவந்தனர். மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர் தொடர்ந்து செம்பால் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.


கல்லுாரி மாணவர்கள் நாட்டுநலப்பணித்திட்டத்தில் சேர்ந்து சமூகப்பணியாற்றி வருகின்றனர். நேற்று நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.அந்த நிறைவு விழாவில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி உரையாற்றினர்.

No comments:

Post a Comment

Post Top Ad