சேலம் மாவட்டம் தொளசம்பட்டி ஊராட்சியில் நாளை தொளசம்பட்டி ஊராட்சி மன்றமும் செயின்ட் ஜோசப் ஸ்பெசலிஸ்ட் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் தோல் நோய்க்கான இலவசம் மருத்துவ முகாம் நாளை 30.11.2024 காலை 10 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது இதனை தலைமை தாங்கி மாவட்ட கவுன்சிலர் K.S.R.சண்முகம் அவர்கள் நடத்த உள்ளார் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னிமலை ஊராட்சி மன்ற தலைவர் ,பூபதி பொன்னுவேலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்,செந்தில்குமார் ஒன்றிய கவுன்சிலர்,சாந்தி சர்வம் ஒன்றி கவுன்சிலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் தோல் நோய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் இலவச மருத்துவம் பார்க்கப்படும் என அருட்தந்தை டாக்டர் J.விமல்தாஸ் அவர்கள் கூறியுள்ளார் இதில் தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தொளசம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் செயின்ட் ஜோசப் ஸ்பெசலிஸ்ட் மருத்துவமனை சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்..
No comments:
Post a Comment